சோதனை மேல் சோதனை... ஒட்டுமொத்த தேசமும் இருளில் மூழ்கும் அபாயம்!



வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் அரிசி, கோதுமை, மருந்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அங்கு அனல் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காசல்ரீ நீர்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கெனவே இலங்கையில் சுழற்சி முறையில் தினமும் 6 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ள நிலையில், விரைவில் அது பத்து மணி நேரமாக அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Joe Wicks Reveals The 6 Worst Fitness Habits You Might Have Picked Up In Lockdown #Habits